மழலைத்தமிழ்

முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம் இன்சொ லின்தே அறம்.

மீன்

எனக்கு பசித்தது
உன் உடலை புசித்தேன்
ஆனால்,
உன் அழகில் மயங்கி
உன்னை என் கரங்களால் அணைத்தேன்
என்னை அழசெய்துவிட்டாய்.

கைமாறு

இவன் பேருந்து நிலையத்தில் நின்றுக்கொண்டு இருந்தான்
ஒருவன் உதவி என்றான்
இவனால் மறுக்க முடியவில்லை
பர்சை எடுத்து- அதில் இருந்து
பத்து ரூபாய் எடுத்து கொடுத்தான்
அவனும் மகிழ்ச்சியோடு சென்றான்
இவன் சிறிது நேரம் கழித்து
கடைக்கு சென்றான்
ஆனந்த விகடன் வாங்கினான்
சிறிது நேரம் கழித்து
சாப்பிட செல்லாம் என
பர்சை தேடினான்
பர்ஸ் இல்லை
அவனிடம் உதவி என்றான்
அவனும் மறுக்கவில்லை
நூறு ரூபாய் தந்தான்
இவனக்குள் ஒரு சிறு மகிழ்ச்சி
நிலைக்கவில்லை
அதிர்ச்சி அடைந்தான்
அது இவன் பர்ஸ்சில் இருந்த ரூபாய்தான்.

நரேன்

நிலா

நிலா

உன்னை பார்பேன்
என்றும் நினைப்பேன்
உன் அழகை பார்ப்பேன்
உன்னிடம் பேச நினைப்பேன்
உன்னை தொட்டுபார்க்க நினைத்தேன்
என்னை விட்டு தூரம் போனாய்.

மொழியும் சமூகமும்

மொழியும் சமூகமும்
டாக்டர்.எஸ்.குமார்.
குமரி மாவட்டத்தில் கடுவா ஆட்டம்.

மனிதனுக்கு இயல்பாகத் தோன்றுகின்ற உணர்வு கலை உணர்வு. கலை என்பது ஒரு வழி. அதன் மூலம் நிகழும் முக்கிய நிகழ்ச்சி, கொடுப்ப்த்ம்,கொள்வத்ம், அறிவிப்பதும் அறிவதுமாகும். ஒரு மனிதனின் உள்ளுறைவை மற்றொரு மனிதனின் உள்ளத்துக்குக் காட்டுவதும் கலை எனலாம். அது ஒருவனின் உண்மையான் பரிச்சயத்தை மற்றவனுக்குக் கொடுக்கும் தன்மை கொண்டது. ஒருவனின் மெளனச் செதியை இன்னொருவனுக்கு சுய துக்கங்களின் அனுபவத்தை மற்றொருவன் பெறும்படிச் செய்யும். பண்டைய நாளின் இயற்கையோடு இயைந்த வாழ்வினை நடத்திய மனிதன் பல கலைகளையும் உருவாக்கி மகிழ்ந்தான்.
ஆதியில் வேட்டையாடுதல் முதலிய மனிதத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒத்திகையாக் அலல்து மாந்திரிகச் சடங்கு ஆசாரமாக் ஆடற் கலைகள் தோன்றின் என்பது மானிடவியலார் கருத்தாகும். அதுவே பிற்காலத்தில் மனமகிழ்ச்சியை முக்கிய நோக்கமாகக் கொண்டு மனித உணர்வுகளை வெளிக்காட்ட கலைகளை மனிதன் வடிகாலாக்கிக் கொண்டான். மக்களின் மன இயல்பு ஒன்றாக இருப்பினும் வாழ்க்கை சூழல் காலத்தாலும் இடத்தாலும் மாறுதலுல்லுகுள்ளாவதால் சிந்தனைகள் வேறாகி வாழ்க்கை முறை பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகிறது.இந்த மாற்றங்களுக்கு ஏற்ப அவர்களின் கலை அம்சங்களும் மாற்றம் கொள்ளும். கலைகளில் முழுமையானது ஆடற்கலை. மனிதன் கைகால்களை அசைக்கிறான். தாவுகிறாம்,குதிக்கிறான். துன்பமிகுதியாலும் கை கால்களை அசைக்கிறான். அலைகிறான், துடிக்கிறான்,இங்ஙனம் மனிதனின் துன்ப இன்ப உணர்வுகளை அவனுடைய வாழ்க்கைத் தேவைகளை உடலசைவுகளால் வெளிப்படுத்துகிறான்.
தொடரும் இச் செய்தி...........................

சிந்தனை செய் மனமே.

கட்டிக் கொடுத்த சோறும் சொல்லிக் கொடுத்த புத்தியும் கற்று உணர்ந்த
பாடமும் எத்தனை நாள்களுக்குத்தான் பயன்படும். கொஞ்சம் சிந்தித்துப்
பாருங்கள்.... இப்பொழுது உங்களுக்கே சுய புத்தியின் அவசியம் விளங்கும்.
சுய புத்தியுடன் செயல்படுவதற்கு ஒரு மனியனுக்கு சிந்திக்க தெரிந்திருக்க
வேண்டும்.

மிக பெரிய விடுதி

உலகிலேயே மிகப் பெரிய ரெயில் பயணிலள் விடுதி சீனாவில் பெய்ஜிங்
ஸ்டேஶனில் இருக்கிறது. இது 1959-ஆண்டில் கட்டப்பட்டதாகும். இதில் 11
ஆயிரம் பயணிகள் வசதியாகத் தங்கி ஓய்வுஎடுக்கலாம்.

நான் படித்தவை

நகரும் தாவரம்தாவரங்கள்
பொதுவாக ஒரே இடத்தில்தான் இருக்கின்றன. அவ்வாறு ஒரே
இடத்தில் இல்லாமல் இடம் விட்டு இடம் நகரக்கூடிய ஒரு வகைத்
தாவரமும் இருக்கிறது. இந்தவகை தாவரத்தின் பெயர் கிளை மடோமோனஸ்.
இது பாசி இனத்தைச் சேர்ந்தது. தண்ணீரின் மூலம் இடம் விட்டு இடம்
நகர்ந்து செல்கிறது.

உங்களுக்குத் தெரியுமா?

'சோனஸ்' என்ற லத்தீன் வார்த்தைக்கு ஒலி என்று பொருள். இதை அமெரிக்கர்கள் 'சோனி' என்பார்கள். சோனி என்றால் பிரகாசமான் இளைஞர் அல்லது நட்சத்திரம் என்று பொருள்.
*நாளிதழ்களுடன் இலவச இனைப்பை முதன் முதலாக வழங்கிய ஏடு 'தி
நியூயார்க் டைம்ஸ்'.

*தவளைகள் அதன் கண்கள் வழியாக ஒலிகளை கேட்கிறது.

*ஒரு புறாவில் இருக்கும் இறக்கைகளை எண்ணினால் 135 இறகுகள்
இருக்கும்.
*ஒரு யுகம் என்பது 43 லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகளாகும்.

*ஒவ்வொரு சிலந்திகளும் ஒவ்வொரு வகையான வலைகளை பின்னும்.

குட்டிஸ் பாடல்ள்

இறைவா!
இறைவா! உன்னை வணங்கிடுவேன்
இன்றும் என்றும் போற்றிடுவேன்
அம்மா அப்பா நலம் காக்க
அன்பாய் உன்னை வேண்டிடுவேன்
நலமும் புகழும் நான் பெறவே
நளும் உன்னை பணிந்திடுவேன்.

குட்டிஸ் பாடல்ள்

இறைவன்


இறைவா! உன்னை வணங்கிடு
வேன்இன்றும் என்றும் போற்றிடுவேன்
அம்மா அப்பா நலம் காக்க
அன்பாய் உன்னை வேண்டிடுவேன்
நலமும் புகழும் நான் பெறவே
நளும் உன்னை பணிந்திடுவேன்.

சாய்ந்தாடம்மா

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
சாயல்கிளியே சாய்ந்தாடு
குத்து விளக்கே சாய்ந்தாடு
கோவில் புறாவே சாய்ந்தாடு
கட்டிக் கரும்பே சாந்தாடு
கண்ணின் மணியே சாந்தாடு.

வாத்து

குவா குவா வாத்து
குள்ள ம்ணி வாத்து
மெல்ல உடலைச் சாய்த்து
மேலும் கீழும் பார்த்து
செல்லமாக நடக்கும்
சின்னம்ணி வாத்து.

நிலா

நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா
மலை மேலே ஏறி வா
மல்லிகைப் பூ கொண்டு வா
பட்டம் போலப் பறந்து வா
பம்பரம் போல் சுற்றி வா

கிளி

பச்சைக்கிளியே வா வா
பறந்து பறந்து பக்கம் வா
பழங்கள் தின்ன ஓடி வா
பாலும் சோறும் உண்ண வா
என்னைப் போல நியும்
மழலைப் பாட்டு பாட வா.

மரம்

வீட்டுக்கொரு மரம் நடுவோம்
வீதியோரம் மரம் வளர்ப்போம்
நாட்டுக்கொரு தொண்டு செய்வோம்
நல்ல ம்ழை பெற்று மகிழ்வோம்.

பாராட்டு

அக்காவுக்கு கேரட்டு
அண்ணாவுக்கு பீட்ருட்டு
பாப்பாவிக்கு பிஸ்கட்டு
தம்பிக்கு சாக்லெட்டு
வாங்கப் போனேன் மார்க்கெட்டு
வாங்கி வநதேன் பாராட்டு.

கடமை

காலையிலே எழுந்திரு
கடவுளை வணங்கிடு
காலை கடனை முடித்திடு
கல்வி சாலை சென்றிடு
கருத்தாய் பாடம் படித்திடு.

பூனைக்குட்டி

மியாவ் மியாவ் பூனைக்குட்டி
யாரைத் தேடுகிறாய் பூனைக்குட்டி
சும்மா சும்மா கத்தாதே
சுற்றிச் சுற்றி வராதே அண்ணா! இப்போ வந்திடுவார்
அன்பாய் பாலைத் தந்திடுவார்

சுத்தம்

கிழிந்த சின்ன காகிதம்
கிடக்கு இங்கே தரையிலே
இட்டு நீயும் எடுப்பாய்
எட்டி உள்ள கூடையில்
கிட்ட வந்து போடுவாய்
சுத்தம் நீயும் காப்பாய்.

திசைகள்

சூரியன் உதிப்பது கிழக்குத் திசை
மாலையில் மறைவது மேற்குத் திசை
இமயம் உயர்ந்தது வடக்கு திசை
குமரி குவிந்தது தெற்கு திசை
குறிப்பிட்டுச் சொல்வேன் நான்கு திசை
கிழக்கு,மேற்க்கு,வடக்கு,தெற்க்கு.

பள்ளிக்கூடம்

பள்ளிக்கூடம் போகலாம்
பாடங்களைப் படிக்கலாம்
புய்த்தகத்தைப் புரட்டலாம்
புதிய பாடம் படிக்கலாம்
பழைய கதைகள் கேட்கலாம்
இந்தியாவை போற்றலாம்.

டக்டக் கடிகாரம்

டக்டக்டக்டக் கடிகாரம்
தட்டு நிறையப் பணியாரம்
குட்டிக் குட்டி சுண்டெலிகள்
எட்டி எட்டிப் பார்த்தன்வே
டாண் டாண் என்றது கடிகாரம்
தாவி ஓடின் சுண்டெலிகள்.

நேரு மாமா

அதோ பாரு ரோடு
ரோட்டு மேல காரு
கருக்குள்ள யாரு
நம்ம மாமா நேருநேரு
என்ன சொன்னாரு
நல்லா படிக்கச் சொன்னாரு
நான் நல்லாப் படிப்பேன்
நாட்டுக்காக உழைப்பேன்.

குரங்கு மாமா

குற்றாலம் போனேன்
குரங்கு மாமா பார்த்தேன்
குட்டிக்கரணம் போட்டார்
குதித்துக் குதித்து ஆடினார்
அங்கும் இங்கும் தாவினார்
ஆர்ப்பரித்துச் சித்தேன்.

குருவி

குருவி பறந்து வந்தாம்
குழந்தை அருகில் நின்றதாம்
பாவம் அதற்குப் பசிததாம்
பாப்பா நெல்லைக் கொடுத்ததாம்
குருவி அந்த நெல்லையே
கொத்திக் கொத்தி தின்றதாம்
பசியும் நீங்கிப் பறந்தாம்
பாப்பா இன்பம் கொண்டதாம்.
online casino gambling
Online Casino Guide